Friday, January 14, 2011

கருணையில்லான் கைபட்டுக் கற்பழிந்த காப்பியங்கள்

கண்ணகிதன் வரலாற்றைக் கருணை யில்லான்
கைதொட்ட மாத்திரத்தில் கற்ப ழிந்தாள்
அண்ணன்மார் வரலாறும் அப்ப டித்தான்
அருங்குறளின் பொலிவழிக்க அவன்எ ழுந்து
பின்னமிட வந்தகுற ளோவி யத்தால்
பெரும்புலவன் செத்தொழிந்தான் தமிழைக் காக்கும்
பண்ணரிதொல் காப்பியமும் தப்ப வில்லை
பாவியிவன் வாழும்நாள் தமிழின் கேடே!